தஞ்சை ; மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை ஒரு தலைப்பட்ச காதலா ? அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்.

 காதல், கோபம், கொடூரம் – சமூகத்தின் மௌனம் எப்போது முடிவடையும்?






தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ரமணி  வயது 26   அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது 30 கொடூரமான படுகொலை செய்துள்ளார் சமுதாயத்தின் சட்ட ஒழுங்கு நிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  காதலின் பின்னணி மற்றும் பெற்றோரின் மறுப்பு, இந்தக் கொடுமை சம்பவத்திற்கு காரணமாகியிருக்கிறது என்பதிலே இளைய தலைமுறையின் உணர்ச்சிவசப்பட்ட நிலை தீவிரமாக வெளிப்படுகிறது.

இத்தகைய செயல்கள் சமூக ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சமுதாயம் இனிமேல் இத்தகைய கொடுமைகளை மௌனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் ஒழிக்கக் கோரிக்கை விடுக்கின்றோம்.

சமூக கட்டமைப்புகள், குடும்ப உறவுகள், காதல், மற்றும் சட்டத்தினை மதிக்கும் மனப்போக்குகளை உருவாக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். இதற்கு மாற்றாக மௌனம் காக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற குற்றச்செயல்களில் பங்கேற்றதற்குச் சமமானவர்களாகப் பார்க்கப்படுவர்.

இது போன்ற சம்பவங்கள் இளைய தலைமுறைக்குப் பெரிய பாடமாக இருந்து, சமூகத்தில் ஒற்றுமை மற்றும் மகளிர் பாதுகாப்பு மீண்டும் நிறுவப்பட வேண்டும். 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

பெற்றோர் ஒப்புதலின்றி இளைஞர்கள் எடுத்துவிடும் தீவிர முடிவுகள், சமுதாயத்தின் ஒழுங்கமைப்புகளை சீர்குலைக்கின்றன. பெற்றோர்களும், சமூக அமைப்புகளும் இணைந்து இளைஞர்களின் உணர்ச்சிகளைச் சரியான பாதையில் வழிநடத்த முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடக்காதவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி தற்காப்பு மற்றும் சமூக நல விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சமூக அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட, அனைத்துக் குடும்பங்களும், பள்ளிகளும், மாணவர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

க.மு.க.பி – ஒரு காதல் கதையின் புதிய கோணம்!

Tragedy on Andhra Highway: 11 Dead After Hyderabad–Bengaluru Bus Fire in Kurnool

குர்னூலில் பெரும் விபத்து – ஹைதராபாத்-பெங்களூரு பஸ்ஸில் தீப்பற்றி 11 பேர் உயிரிழப்பு